3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை (Hybrid renewable energy systems) நிறுவுவதற்கான ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது டெல்ப், எழுவைதீவு மற்றும் நைனா தீவுகளுக்கானதாகும்.

அதற்காக இந்திய அரசு 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்களை மானியமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

530 கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவாட் சூரிய சக்தி, 2400 கிலோவாட் மின்சார செல்கள் மற்றும் 2500 கிலோவாட் டீசல் உற்பத்தி செய்யும் இந்த ஹைபிரிட் அமைப்பின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் “USOLAR” நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு நிதி வசதிகளை வழங்கிய இந்திய அரசு, இந்திய உயர்ஸ்தானிகர், முன்னாள் உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளுக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர நன்றி தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

மரண விசாரணை, பிரேத பரிசோதனையால் சாந்தனின் பூதவுடல் யாழ். வருவது தாமதம் – இறுதிக்கிரியை தொடர்பில் இன்னும் முடிவில்லை.

பெங்களூரு குண்டு வெடிப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய தில்லி போலீஸார்!

கேரள மாணவர் மரணம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்

சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி

Leave A Reply

Your email address will not be published.