கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88 ஆவது வார்டில் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் வேலையை புறக்கணித்து 88-ஆவது வார்டு அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்திக்க சென்றபோது மாநகராட்சி ஆணையரை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவருடன் வந்த சக உதவி ஆணையர்,துணை ஆணையர் வாகனங்கள் முன்பு படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கூறிய நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலதிக செய்திகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை வன்கொடுமை செய்த கல்பிட்டி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்.

முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையாவது உயிருடன் விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்புங்கள்! – இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சரிடம் சிறீதரன் வேண்டுகோள்; சாந்தனின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி உரை.

சாந்தனை அழைத்து வர நடவடிக்கை எடுத்தோம்! புற்றுநோயே அவரைப் பலியெடுத்தது!! – இப்படிக் கூறுகின்றது இலங்கை அரசு.

வடக்கில் சூரிய மின்கலத் திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை! – அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு.

வடக்கு பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம்!

வடக்கு பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம்!

ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கும் நீங்கள் மக்களுக்குத் தீர்வு வழங்கவேமாட்டீர்கள்! – ரணிலுக்குச் சஜித் பதிலடி.

Leave A Reply

Your email address will not be published.