ஜனாதிபதி ரணில், பிரதமர் சஜித் : தூதரக பணி வெற்றி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைப்பதில், இரண்டு பிரதான தூதரகங்கள் செயல்பட்டு வருவுதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னோக்கி செல்லுமாறு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்க நேரிடும் என அக்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிராமிய மட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சாதகமான கருத்துக்கள் வெளிவருவதால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூர் தலைவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.