தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

தில்லியின் கேஷப்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 40-50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தில்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தில்லி காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த இடத்துக்கு இணையாக மற்றொரு பள்ளத்தைத் தோண்டி மீட்பு பணியை தொடர்வோம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.