தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் சிக்கின!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகளைத் தமிழகப் பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தபோதே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒவ்வொன்றும் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் 1400 கிலோ பீடி இலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

பீடி இலைகளை ஏற்றி வந்த வாகனம், தமிழகப் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தில் இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்களைக் கடத்தும் நோக்கில் ஏற்றிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.