கதிரையிலிருந்து ரணிலை துரத்தி விட்டு அனுரவை அமர்த்துவதால் மட்டும் நாடு மாறாது- விஜித ஹேரத்

ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து துரத்திவிட்டு , அனுர திஸாநாயக்கவை அந்த கதிரையில் அமர்த்துவதால் மட்டும் நாடு முன்னேறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரை பின்பற்றப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும், ஜனதா விமுக்தி பெரமுனவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, தோற்ற கட்சியை துன்புறுத்தும் கலாசாரத்தை கொண்டுள்ளதாகவும், தோல்வியடைந்த கட்சி மீண்டும் தனது அரசாங்கம் வரும் வரை அதற்கு பழிவாங்க காத்திருப்பதாகவும், இந்த அரசியல் கலாசாரமும் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.