தில்லியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: இருவர் பலி

தில்லியில் பழைய இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

தில்லி கபீர் பகுதியில் உள்ள பழைய இரண்டு மாடிக் கட்டடத்தில் முதல் தளம் காலியாகவும், தரைத் தளத்தில் சிறிட ஆடை தயாரிப்பு கடையும் இயங்கி வந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில், தரைத் தளத்தில் உள்ள கடையில் பணிபுரிந்த அர்ஷத்(30) மற்றும் தெளஹித்(20) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ரெஹான்(22) என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேலும், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டடத்தில் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும்! – கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை

தமிழக மீனவர்களின் படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கும் விளக்கமறியல்!

கோட்டாவே குற்றவாளி! – தயான் பதிலடி.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் சிக்கின.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பு பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு.

தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

யாழில் கடலில் மூழ்கி இருவர் பரிதாபச் சாவு!

Leave A Reply

Your email address will not be published.