காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர் – பறிமுதல் செய்த போலீசார்!

ஹெலிகாப்டர் போல் வடிவமைக்கப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கஜோரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தனது காரை சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார்.

இதனை திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடும் எண்ணத்தில் அவர் வடிவமைத்துள்ளார். இந்நிலையில் அந்த காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அந்த ஹெலிகாப்டர் மாடல் காரை பார்த்த போக்குவரத்து காவலர்கள், விதிகளை மீறி காரில் மாற்றங்கள் செய்ததாக கூறி ரூ.2,000 அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அபராதத்தை செலுத்திய பிறகு காரை விடுவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக காரை பறிமுதல் செய்ததாகவும், காரின் வடிவமைப்பை மாற்றுவதற்கு ஆர்டிஓவிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகள்

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும்! – கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை

தமிழக மீனவர்களின் படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கும் விளக்கமறியல்!

கோட்டாவே குற்றவாளி! – தயான் பதிலடி.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் சிக்கின.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பு பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு.

தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

யாழில் கடலில் மூழ்கி இருவர் பரிதாபச் சாவு!

தில்லியில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: இருவர் பலி

Leave A Reply

Your email address will not be published.