மாவட்டச் செயலகத்தில் எழுமாற்றாக கொரணா பரிசோதனைகள் முன்னெடுப்பு.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் எழுமாற்றாக PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் இன்றைய தினம் எழுமாற்றாக PCR பரிசோதனைக்காக மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
முதற்கட்டமாக பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தி மாவட்டச்செயலகத்திற்கு அன்றாடம் கடமைக்கு சமூகமளிக்கும் 50 உத்தியோகத்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த பரிசோதனை நடவடிக்கைக்கு உத்தியோகத்தர்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
இந்த பரிசோதனை நடவடிக்கையில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி திரு.சுவேந்திரன் அவர்களுடன் சுகாதாரத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.