மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப மரணம்!

குரங்கிடமிருந்து வாழைத்தோட்டத்தைக் காப்பாற்றத் தொடுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மடூல்சீமை பொலிஸார் (30) தெரிவித்தனர்.

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் மேற்படி முதியவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வாழை மரத்தில் உள்ள வாழைக்குலையைக் குரங்கிடமிருந்து காப்பாற்ற வாழை மரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியைக் கழற்ற முற்பட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்.

எக்கிரிய பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

சடலம் மீகாகியூல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.