இரு வேறு இடங்களில் ஒரே ரயிலால் மோதப்பட்டு இருவர் பரிதாப மரணம்!

கண்டியிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலால் இரு வேறு இடங்களில் இருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தப் பரிதாப சம்பவங்கள் (30) இடம்பெற்றுள்ளன.

இன்று காலை 8.45 மணியளவில், ராகமையிலுள்ள கடவை ஒன்று மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ராகமை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தையடுத்து அந்த ரயில் மீண்டும் கொழும்பு – கோட்டை நோக்கி அதன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், ராகமை – துடுவேகெதர பகுதியில் வைத்து அதே ரயிலால மற்றுமொரு நபர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சிக்கி 50 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.