டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த பயணி… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் ரயிலில் இருந்து பயணியால் கீழே தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மற்றொரு ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்ற விரைவு ரயிலில், வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, எஸ் 11 பெட்டியில் ரஜினிகாந்த் என்ற பயணி மதுபோதையில், உரிய முன்பதிவு இன்றி பயணித்தது தெரியவந்தது. மேலும், சிலரும் அவருடன் முன்பதிவு இன்றி பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாக்குவாதம் எழுந்த போது, ஆத்திரம் அடைந்த ரஜினிகாந்த், திருச்சூர் அருகே உள்ள வேலப்பையா என்ற இடத்தில் டிக்கெட் பரிசோதகர் வினோத்தை ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.

அப்போது, எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில், டிக்கெட் பரிசோதகர் வினோத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, ஓடிசாவை சேர்ந்த ரஜினிகாந்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

வடக்கில் அனுரகுமாரவின் போஸ்டரால் குழப்பம்! – கல்விப் புலத்தில் அதிருப்தி

துருக்கி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பின்லாந்து பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் காயம்.

தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை.

பெண்களை அவமானப்படுத்தும் கட்சி தி.மு.க., பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை.

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மூவரும் , இன்று சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு.

மாலையில் இடியுடன் கூடிய மழை.

மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய உணவு – சுசில் பிரேமஜயந்த.

இலங்கை அணி 192 ஓட்டங்களால் சிறப்பான வெற்றி.

Leave A Reply

Your email address will not be published.