கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை! – நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்…

மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலயத் திருவிழா இடம்பெறும் வேளையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக நேற்று மாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தனியார் பஸ்கள் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அதிக நோயாளிகள் வருகை காரணமாக வைத்தியசாலையில் அனைத்துப் பகுதியினரும் பணியில் ஈடுபட்டனர்.

நோயாளிகள் பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்றும், 28 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணீர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.