தொலைபேசியின் 80% த்துடன் புதிய சின்னத்தில் , ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு?

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள முன்வைத்த கருத்தை வரவேற்று , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னம் மற்றும் மொட்டு சின்னம் தவிர்ந்த புதிய சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் , பொஹொட்டுவ சின்னத்தில் போட்டியிடும் போது இதே பிரச்சினை ஏற்படும் எனவும் , ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணியில் புதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த ஜனாதிபதித் தேர்தலில் 80% க்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள முன்வைத்த கருத்தை வரவேற்பதாக அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.