ஓட்டு சேகரிப்பின் போது, பெற்றோரின் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து அண்ணாமலை பேசும் போது கண் கலங்கினார்.

முதியோர் இல்லத்தில் ஓட்டு சேகரிப்பின் போது, பெற்றோரின் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து அண்ணாமலை பேசும் போது கண் கலங்கினார்.

கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் முதியோர் இல்லத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஓட்டு சேகரித்தார். அப்போது,அவர் பெற்றோரின் பிள்ளைகள் வளர்ப்பு குறித்து பேசும் போது கண் கலங்கினார். மேடையில் இருந்தவர்கள் அண்ணாமலைக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது: கடந்த ஒரு ஆண்டு காலமாக இங்கு (முதியோர் இல்லம்) வந்து மாலை பொழுதில் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என கடும் முயற்சி எடுத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. நேற்று மிக உறுதியாக இருந்தேன். இன்று கடைசி நாள் பிரசாரத்தில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன். உங்களை இன்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு உருக்கமாக அண்ணாமலை பேசினார்.

முதியோர் இல்லத்தில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு அண்ணாமலையை வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.