இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

தனது இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள் இருப்பதே காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்க் ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியா வரவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா தலைவரும், உலகின் மிகப் பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வருகையை ஒத்திவைத்திருப்பதற்கான காரணத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துரதிருஷ்டவசமாக, மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக எனது இந்திய பயணம் ஒத்திவைக்கப்படுகிறது, ஆனால், இந்த ஆண்டுக்குள் இந்தியாவின் பயணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமா் மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளவிருந்தார்.

இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டெஸ்லாவின் முதல் காலாண்டு செயல்திறன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்காவில் ஏப்ரல் 23 அன்று மஸ்க், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிசெய்யும் வகையில், அவரது எக்ஸ் பதிவு அமைந்துள்ளது.

இந்தியாவில் மின்சார காா்களைத் தயாரிக்க அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறாா். இந்நிலையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் குழுவுடன் இந்தியா வருவதற்கு பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது.

முன்னதாக, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எலான் மஸ்க் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித்திருந்ததாவது, இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் , வாக்கு விழுக்காடு அதிகரிப்பு

ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை தமிழ் மக்களின் ஆதரவை ரணில் பெறவே முடியாது! – சஜித் தரப்பு கூறுகின்றது.

8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி.

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறும் எரிமலை.மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.

1 லட்சம் வாக்குகளை காணோம்; மறுபடி நடத்தனும் – அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!

ஜாமீனுக்காக சிறையில் மாம்பழம், இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம்; மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

உறவு கொள்ளாமல் கருவுற்ற இளம் மாணவி… காதலன் கூட இல்லை

Leave A Reply

Your email address will not be published.