ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; மக்கள் போராட்டம் – போலீசார் அதிரடி!

ராமர் படம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி பரிமாறப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானது. இதனால் கோபமடைந்த மக்கள் பலர் அந்த ஹோட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்தது தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது பிரியாணி பரிமாறப்பட்ட தட்டில் ராமர் படம் இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு தொழிற்சாலையில் இருந்து 1,000 பேப்பர் தட்டுகளை அவர் வாங்கியதும்,

அதில் 4 தட்டுகளில் மட்டும் ராமர் படம் அச்சிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலதிக செய்திகள்

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள்! உங்கள் ‘பண டீல்’ விடிவுக்கான பயணத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்!! – புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் எம்.பி. பகிரங்கக் கோரிக்கை.

மலையக மக்களை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு! – உயர்ஸ்தானிகரைச் சந்தித்த திலகர் வலியுறுத்து.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ. 1700 கிடைக்குமா? – இன்று கூடுகின்றது சம்பள நிர்ணய சபை.

ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை! – 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

நாமலுக்குக் கிடைத்த பதவியால் கடும் அதிருப்தியில் பஸில் – சமல்.

பெண்ணுக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு! – யாழில் கொடூரம்.

லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

நாட்டிற்காக தனது தாய் தாலியை தியாகம் செய்தவர் – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது!

Leave A Reply

Your email address will not be published.