மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது!

பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தில் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் மீது ஆன்லைனில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

மேலும், புகார் அளித்த பெண்ணும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீஜித்தும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.

அதன் அடிப்படையில், போலீஸார் ஸ்ரீஜித்தை கைது செய்துள்ளனர். இவர் தற்போது தனியாக நடன பள்ளி அமைத்து வரும் நிலையில் இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள்! உங்கள் ‘பண டீல்’ விடிவுக்கான பயணத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்!! – புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் எம்.பி. பகிரங்கக் கோரிக்கை.

மலையக மக்களை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு! – உயர்ஸ்தானிகரைச் சந்தித்த திலகர் வலியுறுத்து.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ. 1700 கிடைக்குமா? – இன்று கூடுகின்றது சம்பள நிர்ணய சபை.

ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை! – 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

நாமலுக்குக் கிடைத்த பதவியால் கடும் அதிருப்தியில் பஸில் – சமல்.

பெண்ணுக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு! – யாழில் கொடூரம்.

லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

நாட்டிற்காக தனது தாய் தாலியை தியாகம் செய்தவர் – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

Leave A Reply

Your email address will not be published.