பிரசாரத்திலிருந்து ஒதுங்கிய குஷ்பு : கடுப்பாகியுள்ள அண்ணாமலை தரப்பு!

தமிழ்நாட்டில் பா.ஜ.க 19 தொகுதிகளில் போட்டியிட்டும், தென்சென்னை, வடசென்னை ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்தார் நடிகை குஷ்பு. பிறகு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரசாரத்திலிருந்து தடாலடியாக ஒதுங்கிக்கொண்டார். இப்போது தெலங்கானாவில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். “கட்சியில் முக்கிய பொறுப்பும், எம்.பி சீட்டும் கிடைக்காத கோபத்தில்தான் தமிழக பிரசாரத்தை ரத்து செய்துவிட்டார் குஷ்பு.

தமிழகத்தில் பிரசாரம் செய்ய முடியாதவரால், எப்படி தெலங்கானாவில் பிரசாரம் செய்ய முடிகிறது?” என்று கடுகடுக்கிறார்கள் அண்ணாமலை தரப்பினர். ஆனால் குஷ்பு ஆதரவாளர்களோ, “மேடத்துக்கு உண்மையிலேயே உடல்நிலை சரியில்லை. முதுகில் அறுவை சிகிச்சை செய்வதற்காக விரைவில் அவர் சிங்கப்பூருக்குச் செல்லவிருக்கிறார்” என்கிறார்கள்!

Leave A Reply

Your email address will not be published.