கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அதில் மக்களிடையே பிரபலமான அவர், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் அண்மையில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார்.

இதற்கிடையே அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சவுக்கு சங்கர் பேசி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் இன்று காலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் மட்டுமே என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலதிக செய்திகள்

கோர விபத்தில் உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு!

இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார.

தேர்தலுக்குச் சென்றால் பொருளாதாரம் குலைந்து போகும்..- மத்திய வங்கி.

ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிசினஸ் வீழ்ச்சி.

பிரசாரத்திலிருந்து ஒதுங்கிய குஷ்பு : கடுப்பாகியுள்ள அண்ணாமலை தரப்பு!

கர்நாடகாவை அதிரவைத்துள்ள பா.ஜ.க கூட்டணி வேட்பாளரின் காமலீலைகள்: வைரலான வீடியோக்களால் பின்னடைவு?

விசா பகுதி செயலிழந்தது சதியாலா? அரசு விசாரணை.

இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கல்கட்டா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

Leave A Reply

Your email address will not be published.