தேர்தல்கள் ஒத்திவைப்புக்கு நாமல் எம்.பி. போர்க்கொடி!

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

“தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல” – என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.