பாலியல் லஞ்ச குற்றச் சாட்டுக்குள்ளான பாராளுமன்ற அதிகாரி ஓய்வு பெற உள்ளார் ?

பெண்களிடம் தகாத ஆலோசனைகளை முன்வைத்து ஒழுக்கமற்ற முறையில் பாலியல் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னர், குறித்த காலத்திற்கு முன்னதாகவே அவர் ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பில் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட நபர் ஓய்வு பெற உள்ளார்.

அந்த அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒழுக்காற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என நாடாளுமன்றத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தற்காலிகமாக ஓய்வு பெற அவர் முடிவு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் முன்கூட்டியே ஓய்வு பெற அனுமதித்தால், அது குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் துறையில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்கும் போது பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள் தொடர்பாக எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் பல சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தலைவர்கள் சமீபத்தில் அந்த அதிகாரியை விசாரிக்கத் தொடங்கினர்.

இதேபோன்ற குற்றச்சாட்டில் இந்த அதிகாரி சில காலத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

எனினும், முன்னாள் அதிகாரியினால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாகவே அவருக்கு மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.