வவுனியாவில் புதிய கேட்போர் கூடத்தின் திறப்பு விழா நிகழ்வு.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இன்று (01.10.2020) வவுனியா மாவட்ட செயலகத்தில் சுமார் 55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கேட்போர் கூடத்தின் திறப்பு விழா நிகழ்வு நீர்பாசனத்துறை அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டச் செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற
குறித்த நிகழ்வில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான #கெளரவ #காதர் #மஸ்தான் அவர்களோடு வட மாகாண ஆளுநர் திருமதி  பி.எஸ்.எம் சார்ள்ஸ்,
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்,வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிஷாட் பதியுதீன்,  செல்வம் அடைக்கலநாதன்  குலசிங்கம் திலீபன் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) கமால் குணரட்ன உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.