பருத்தித்துறையில் குழு மோதல்; இரு பொலிஸார் மீதும் தாக்குதல்!

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருதித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஒரு தரப்புடன் கதைக்க முற்பட்ட பொலிஸார் இருவர் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருதித்துறை, புனிதநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தரப்பும் கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன் தடிகளுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் மோதல் நகர்ந்து பருத்தித்துறை நகர் வரையும் சென்றிருக்கின்றது.

அங்கு மோதலில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்து சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸார் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மற்றைய தரப்பினருக்குச் சாதகமாகக் கதைக்க முற்பட்டபோதே தாம் தாக்கியதாக தாக்குதல் நடத்திய தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தாக்குதலாளிகளைக் கைதுசெய்வதற்குப் பருத்தித்துறைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.