முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளாகிய சிறுவனுக்கு நிதியுதவி.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க களஉட ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய எம்.எம். றமிக யுமேத் என்ற சிறுவன்  முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளாகி இந்தியாவில் ஏழு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மேலுமொரு சத்திர சிகிச்சை விரைவாக மேற்கொள்ளவேண்டும் என்ற வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைய  ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹ{மைட் அல் தமீமி அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து மற்றும் ஊவா மாகாண ஆளுநரின்  நிதியிலிருந்தும்  தலா 50,000   ஆயிரம் ரூபா விகிதம்  ஒரு இலட்சம் ரூபாய்  நிதி உதவி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஆளுநரின் அலுவலத்தில் இடம்பெற்றது.

இவ் நிதி உதவியை ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் வழங்கி வைப்பதை இங்கு படங்களில் காணலாம்.

– இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.