கம்பஹாவைச் சேர்ந்த தாதிக்குத் கொரோனா.

கம்பஹாவைச் சேர்ந்த தாதிக்குத் கொரோனா மட்டு. வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வைத்தியசாலையின் ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மெடிஹெல்ப் தனியார் மருத்துவமனையின் மொரட்டுவக் கிளையின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அங்கு சென்றதாலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.