ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் அவர் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) காலை தெஹிவளையில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.