கனடா பொதுத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முக்கிய பேசுபொருள்!

ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற உள்ள கனடா பொதுத் தேர்தலில், முக்கிய நான்கு கூட்டாட்சி கட்சித் தலைவர்களின் முக்கிய பேசுபொருளாக டொனால்ட் ட்ரம்ப் மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்று முன்தினம் (17) நடைபெற்ற முக்கிய நான்கு கூட்டாட்சி கட்சித் தலைவர்களான லிபரல் தலைவர் மார்க் கார்னி, கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவெர், புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் யவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட் ஆகியோர் தங்கள் இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில், அமெரிக்காவுடன் கனடா தொடர்ந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து முக்கியமாக விவாதித்தனர்.
இந்த விவாதத்தில், கனடிய உருக்கு உள்ளிட்ட பொருட்களுக்கு ட்ரம்ப் 25% வரி விதித்தது, அமெரிக்கா கனடாவை தனது 51வது மாநிலம் என அழைப்பது போன்ற விஷயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.
இதுதவிர, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைப்பது ஆகியவை விவாதத்தில் இடம்பெற்ற மற்ற முக்கிய விஷயங்களாக இருந்தன.