பொத்துவில் கடலில் மூழ்கிய 2 இளைஞர்கள் உயிருடன் மீட்பு.

அம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொத்துவில் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், கடலில் மூழ்கிய இருவரையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.