தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட கிளை திறப்பு.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட கிளை திறப்பு

சுபீட்சத்தின் நோக்கு கொள்ளை பிரகடனத்தின் கீழ் இளைஞர்கள் அபிவிருத்தி அடைந்து கொள்வதற்காக இன்று (08) மாலை யாழ் மாவட்டத்திற்கான தேசிய இளைஞர் சேவை மன்றம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான  அங்கஜன் இராமநாதன்,
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்கஅமைச்சர்  தேனுக விதானகமகே அவர்கள், யாழ் அரச அதிபர் கணபதிபிள்ளை மகேசன், யாழ் மாநகர முதல்வர் இ. ஆனோல்ட் மற்றும் அமைச்சின் பிரதிநிதிகள் தலைவர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அங்கஜன் இராமசாதன் அவர்கள் தனது உரையின் போது இக் கட்டடத்தின் பின்னால் உள்ள வெற்று இடத்தில் இளைஞர்கள் யுவதிகளுக்கு விளையாட்டு பயிற்நசிகளை மேற்கொள்ள சிறந்த மைதானம் அமைத்து தரவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.