யாழில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு!
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின நிகழ்வு, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று நடைபெற்றது.
யாழ். இந்தியத் துணை தூதுவர் சாய் முரளி இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.











