என்.பி.பி. அரசாங்கத்தை எளிதில் வீழ்த்த முடியாது! – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிரணிகளின் ஒன்றிணைவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாங்காய் மரத்துக்குக் கல் அடிப்பது போல் ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது.

ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனைப் பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கே அரசு முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது கருத்துகளை முன்வைக்கும்.

எனவே, ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிக் காலத்தில்தான் ஆரம்பமானது. நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம். கல்வியில் அரசியலைத் திணிக்கக்கூடாது. கல்வி மறுசீரமைப்பு என்பது பொறுப்புடன் செய்ய வேண்டிய விடயமாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.