தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை! – கம்பஹாவில் பயங்கரம்.

கம்பஹா, கேரகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹா பெலஹெல பகுதியில் நேற்று இடம்பெற்ற தர்க்கம் ஒன்றின் போது, இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தொம்பே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கம்பஹா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கேரகல பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.