அம்பாந்தோட்டையில் டிப்பர் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபச் சாவு!

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

அம்பாந்தோட்டை, பூந்தல சந்திக்கு அருகாமையில் அதிவேகமாகப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.