ஊடகவியலாளர் சந்திரமதியின் இறுதிக்கிரியை நாளை! 

திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த ஊடகவியலாளர் திருமதி சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான கண்டியில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்சாலையில், மக்கள் அஞ்சலிக்காக இன்றிரவு வைக்கப்பட்டது.

நாளை காலை அவரது சொந்த ஊருக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், மாலை இறுதிக் கிரியைகளும் நடத்தப்படவுள்ளன.

சக்தி நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் கடந்த 4 வருட காலமாக சந்திரமதி குழந்தைவேல் கடமையாற்றியிருந்தார்.

கொழும்பிலுள்ள அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார்.

திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையிலேயே அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.

சந்திரமதியின் உடலில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.