சுவிஸ் : லுகானோவில் ஜிஹாதி பயங்கரவாத செயல் தொடர்பாக பெண் கைது

சுவிஸ் நகரமான லுகானோவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வணிக வளாகத்திற்குள் சந்தேகநபர் இரண்டு பெண்களை காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தகவல்களின்படி, சந்தேக நபர் ஒரு பெண்ணின் கழுத்தை நெரிக்க முயன்றார், மற்ற பெண்ணை கழுத்தில் குத்தியுள்ளார்.

ஒரு பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜிஹாதி பயங்கரவாதம் தொடர்பான விசாரணையின் போது அந்த பெண்ணை 2017 ல் மத்திய போலீசார் ஏற்கனவே விசாரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.