தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி பண்டாரகம பொலிஸ் பிரிவில் பின்வரும் இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அடலுகம கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு.
எபிடமுல்ல கிராம சேவையாளர் பிரிவு.
கொலமெதிரிய கிராம சேவையாளர் பிரிவு.

அதேபோல் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் ( அக்குரணை பிரதேச செயலக பிரிவு) சிலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி புளுகஹாதென்ன கிராம சேவையாளர் பிரிவு, நெலமுகஹாவத்த கிராம சேவையாளர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.