கொழும்பில் இருந்து நுவரெலியா வருபவர்களுக்கு தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனை.

நுவரெலியா மாவட்டத்தில் எழுவருக்கு கொரோனா! கொழும்பில் இருந்து வருபவர்களுக்கு தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனை.

நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, மஸ்கெலியா மற்றும் வட்டவளை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எழுவர் (26.11.2020) இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வட்டவளை – குயில்வத்தை, கினிகத்தேன – ஹிட்டிகே கம, மஸ்கெலியா – மவுசாகலை நைன்ஸா மேல் பிரிவு தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

குறிப்பாக அட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்து வருபவர்களிடம் கலுகல்ல மற்றும் எல்பட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் தொடர்ச்சியாக பெறப்படுகின்றன. எல்பொட சோதனைச்சாவடியில் இன்றுவரை 100 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கலுகல்ல பகுதியிலும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படுகின்றன

Leave A Reply

Your email address will not be published.