பருத்தித்துறை நீதிமன்றமும் நினைவேந்தலுக்குத் தடை!!


பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயதிக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மாவீரர் நாளன்று ஒன்றுகூடுவதோ அல்லது மக்களை ஒன்றுதிரட்டி நிகழ்வுகளை நடத்துவதோ முடியாது என்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று தடைக் கட்டளை வழங்கியது.

மாவீரர் நாள் நினைவேந்தலைத் தடை செய்யுமாறு கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித்தனியாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

அந்த விண்ணப்பம் மீதான கட்டளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நண்பகல் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.