16 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை : தமிழக அரசு

நிவர் புயல் காரணமாக நாளை 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக செம்பரம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தநிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 16-ஆக அதிகரிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.