முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கொள்ளல் நடைமுறை பயிற்சி நெறி.

கொள்ளல் நடைமுறை பயிற்சி நெறி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், கொள்ளல் நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி நேற்று(26) மற்றும் இன்று(27) ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட செயலக மனிதவள மேம்பாட்டு பிரிவு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பயிற்சி நெறியின் வளவாளர்களாக மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் க.லிங்கேஸ்வரன் மற்றும் பிரதம கணக்காளர் மி. யேசுறெஜினோல்ட், கணக்காளர் ரா.றாஜூவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரு தினங்களும் காலை 8.30மணி தொடக்கம் மதியம் 12.00மணிவரை நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் மாவட்ட செயலக மற்றும் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் பிரதேச செயலகங்களை சேர்ந்த 35 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த பயிற்சி நெறிக்குரிய உத்தியோகத்தர்கள் online ஊடக விண்ணப்பித்த அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.