வேலணை பகுதியில் வீதி திருத்த பணியாளர் ஒருவருக்கு கொரணா தொற்று உறுதி.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கொவிட் – 19 சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கபட்டுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப்பணிக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு எழுமாறாக நடத்த பரிசோதனையில் இவ்வாறு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதையடுத்து புளியங்கூடல் பகுதியில் 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை மூடப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 9 மணிவரை 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.