மட்டு. சிறையிலிருந்து இருபது கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

கொவிட் நிலையினை கருத்திற் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து இருபது சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (28) மட்டக்களப்பு சிறைசாலையிலிருந்து சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்துவந்த இருபது சிறைக்கைதிகளே இவ்வாறாக பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதில் இருபது கைதிகளும் ஆண் கைதிகளென சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் நிலையினை கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில் இட நெருக்கடியை குறைக்கும் வண்ணமான செயற்பாட்டிற்காகவே நாடு பூராகவுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் இளைத்தமைக்காக தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.