கொரோனா தடுப்பூசி தயார் : மொடேர்னா நிறுவனம்

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் என அமெரிக்காவின் மொடேர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஸ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.

அந்த வகையில் அமெரிக்காவின் மொடேர்னா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளதுடன் இந்த தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்த நிலையில், தங்களது தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ம மொடேர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தங்களது தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.