பலியான கைதிகளில் 9 பேருக்குக் கொரோனா!

பலியான கைதிகளில் 9 பேருக்குக் கொரோனா!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

மஹர வைத்தியசாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 117 பேர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 115 கைதிகளும், 2 அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில், உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் மீதான பரிசோதனைகளில் 9 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.