பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தீடிர் மரணம்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்ததால் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அல்வாயைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று (09) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

அங்கு அழைத்துவரப்பட்ட சில மணி நேரத்திலேயே குறித்த நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை வைத்தியசாலைப் பகுதியில் கூடியுள்ள 20 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மருத்துவ நடவடிக்கை தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.