டன்ஸ்டன் ஜயசூரியாவின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச  டன்ஸ்டன் ஜயசூரிய அவர்களது பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்!

இலங்கை கிரிக்கெட்டில் தனித்துவமான பெயரை நிலைநாட்டிய சனத் ஜயசூரியாவின் தந்தையின் பூதவுடலுக்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.12.13) பிற்பகல் இறுதி மரியாதை செலுத்தினார்.

டன்ஸ்டன் ஜயசூரிய அவர்கள் தனது 80ஆவது வயதில் காலமானார்.

மாத்தறையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று டன்ஸ்டன் ஜயசூரிய  பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், சனத் ஜயசூரிய உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.