இலங்கையில் இன்று மட்டும் 643 பேருக்குத் தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இன்றும் 643 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 30 ஆயிரத்த 459 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இலங்கையில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 24 ஆயிரத்து 867 பேர் குணமடைந்துள்ளனர். 9 ஆயிரத்து 100 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.