வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்!

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்!

கொழும்பு மாவட்டத்தின் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நஷிர் தோட்டம் பகுதி இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனக்  கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக குறித்த பகுதியிலிருந்து அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.