வவுனியாவில் வீதியோர வியாபாரத்துக்குத் தடை! 

வவுனியாவில் வீதியோர வியாபாரத்துக்குத் தடை! 

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு வவுனியா நகர சபையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பதாக நகர சபையால்  அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நகர சபையினர் அகற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்

இதன்படி வீதியோரங்களில் மரக்கறி வர்த்தக நடவடிக்கைளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.